• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஸ்ரீ பகவான் மகாவீர் கோசாலா சார்பில் அகிம்சையை வலியுறுத்தி கோசாலா குறும்படம் வெளியீடு

October 3, 2019

ஸ்ரீ பகவான் மகாவீர் கோசோலை சார்பில் அஹிம்சையை வலியுறுத்தி குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீ பகவான் மகாவீர் கோசோலை சார்பில் மாடுகளை கொல்லக்கூடாது அஹிம்சை வழியில் நடக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. குறும்பட வெளியீட்டு விழாவில் கோசோலை தலைவர் கைலாஷ் ஜி குமார் ஜெயின், செயலாளர் சுனில் குமார் நகாட்டா ஆகியோர் தலைமை தாங்கினார். விழாவையொட்டி மும்பையை சேர்ந்த குறும்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுதிர் இயக்கிய கோசோலை மாடுகள் பற்றிய விழிப்புணர்வு படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் திருஷ்லா குமாரி கோசாலை மேலாளர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கோசாலை தலைவர் கைலாஷ் ஜி குமார் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது,

பொள்ளாச்சி அருகே மயிலேரிபாளையத்தில் 26 ஏக்கர் பரப்பில் இந்தக் கோசோலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பு 28 மாடுகளைக் கொண்டு பராமரித்து வந்த கோசோலை தற்போது 1250 மாடுகள் உள்ளன இவைகளை பராமரிக்க ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் தேவைப்படுகிறது. அதை நன்கொடை மூலம் பெற்று இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறோம். இன்று அஹிம்சை வழியில் மாடுகளை சித்திரவதை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி குறும்படத்தை வெளியிட்டுள்ளோம். இது கோவை மக்களுக்கு விழிப்புணர்வு குறும்படமாக அமையும் என்றார் இந்த நிகழ்வில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்

மேலும் படிக்க