• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மாவட்டஆட்சியரிடம் மஜக இளைஞரணி நிர்வாகிகள் மனு!

October 2, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மாவட்டஆட்சியரிடம் மஜக இளைஞரணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்டோபர் 2 காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுவிற்கு எதிரான பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் ஒத்தகால்மண்டபத்தை அடுத்த மயிலேரிபாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர்பாஷா, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

மேலும் மஜக வின் மது எதிர்ப்பு பரப்புரை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி மதுவின் தீமைகளை எடுத்துரைத்தனர். மஜக வினரின் இச்செயலை மாவட்ட ஆட்சியரும் கூடி இருந்த பொதுமக்களும் பாராட்டினர். இந்நிகழ்வில் இளைஞரணி மாவட்ட பொருளாளர் பிரோஸ், மாவட்ட துணை செயலாளர்கள் பைசல், சதாம், கிணத்துகடவு பகுதி இளைஞரணி செயலாளர் சாதிக், செய்யது இப்ராஹிம், நாசர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க