• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே பொருள் வாங்குவதுபோல் சென்று பெண்ணிடம் 6.5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

October 2, 2019 தண்டோரா குழு

கோவை அருகே பொருள் வாங்குவதுபோல் சென்று இனிப்பு கடையில் இருந்த பெண்ணின் 6.5 பவுன் தாலி சங்கிலியை இளைஞர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள ஹைஸ்கூல் புதூர் பகுதியில் இக்கரை போளுவாம்பட்டி செல்லும் சாலையில் இனிப்பு, காரம் விற்பனை செய்யப்படும் இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 30ஆம் தேதி இரவு கடையின் உரிமையாளரான முத்து என்ற பெண்மணி, கடையில் விற்பனையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, தொப்பி, கண்ணாடி அணிந்து, முகத்தில் கர்சீப்பால் முகத்தை மறைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் இனிப்பு வகைகள் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். பின்னர் கடையின் வெளியே சென்று மீண்டும் உள்ளே நுழைந்த அந்த இளைஞர், திடீரென முத்து அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார், அப்போது, நிலை தவறி கீழே விழுந்த முத்துவை விடாமல், அவர் அணிந்திருந்த 6.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கொண்டு ஆலாந்துறை காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார். இந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது ஆலந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞர், கடையின் வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபருடன் தப்பி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியை கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க