• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3வயது மகனுக்கு தவறான சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் ஆட்சியரிடம் மனு

September 23, 2019

நீர் இறக்க நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ள தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் பாலகிருஷ்ணன். இவருக்கு பைந்தமிழ் செல்வி என்ற மனைவியும், தீபேஷ் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. இவரது குழந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீரறக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு , 35 ஆயிரம் ரூபாய் செலவில் நீர் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டும் குழந்தைக்கு மீண்டும் நீர் இறக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை பரிசோதித்த குழந்தை நல மருதுவர்கள், குழந்தைக்கு தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிகிறது. இதனால் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையுடன் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் தற்போது 3 வயது குழந்தைக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியநிலைக்கு தள்ளப்படடிருப்பதாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு, உதவிட கோரியும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலிறுத்தினர்.

மேலும் படிக்க