• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிக்கிறது – வானதி சீனிவாசன்

September 21, 2019 தண்டோரா குழு

தற்போதைய பா.ஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதன்மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாகவும் அமைந்துள்ளதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

க்ரைண்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர் ஜி.எஸ்.டி 12% குறைந்துள்ளது மேற்கு தமிழகத்தின் நீண்ட நாட்கள் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஏற்று அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மாபெரும் ஷாப்பிங் கண்காட்சி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. தற்போதைய பாஜக அரசு மக்களுடன் பேசும் அரசாகவும், மக்களின் பிரச்சனை கேட்டறிந்து அதன் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு பணி நியமனங்களில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. ரயில்வே பணிகளில் வடநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பதாக வெளியான தகவல் குறித்து முழு விவரம் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக கூறினார்.

மேலும் படிக்க