• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கோவை மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் ரத்த தானம்

September 21, 2019 தண்டோரா குழு

பாரத பிரதமரின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் சசிகுமாரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் பிறந்தநாள் விழா கோவை மாவட்டத்தில் பாஜக சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனையில் பிரதமர் மோடியின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும், சசிகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டியும் மாவட்ட இளைஞரணி சார்பில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைஞரணி மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் முன்னிலையில் தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினார்கள், இதில் ஆர்வமுடன் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக இளைஞரணி சார்பில் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் ரமேஷ்குமார், மதன்மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவுண்டம்பாளைய மண்டல தலைவர் அசோக்குமார் ஏற்பாடு செய்தார்.

மேலும் படிக்க