• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.ஐ.டி ரோட்டராக்ட் சங்கம் சார்பில் நடைபெற்ற “ஜாசி” என்னும் இதழாசிரிய கருத்தரங்கு

September 14, 2019 தண்டோரா குழு

மாவட்ட ரோட்டராக்ட் சங்கத்தின் இதழாசிரிய குழுமம் சார்பில் “ஜாசி” என்னும் இதழாசிரிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கினை சி.ஐ.டி ரோட்டராக்ட் சங்கம் ஏற்று நடத்தியது.

கோவை தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பங்கேற்றவர்களுக்கு கொரல் ட்ரா, பவர் டெரக்டர் மற்றும் போட்டோசாப் பயிற்றுவிக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் 122 ரோட்டராக்டர்கள் பங்கேற்று பயிற்சிபெற்றனர்.இறுதியில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இக்கருத்தரங்கில் ரோட்டராக்டர் பாலாஜி, மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி ரோட்டராக்டர் அஜய், ரோட்டராக்டர் கிருபாஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க