• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செய்தியாளர்களை சந்திக்கும் எம்.எஸ்.தோனி – ஓய்வு முடிவா?

September 12, 2019 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, இன்றிரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி.கேப்டன் பொறுப்பில் இருந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.ஏற்கனவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு முடிவை அறிவித்த எம்.எஸ்.தோனி,சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாடிய நிலையில்,இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை.

இந்நிலையில்,இன்று மாலை 07.00 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோனி, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க