பந்தலுார் அருகே இரு குழந்தைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 73 மற்றும் 62 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம்,பந்தலுார் அருகே உள்ள அரசு பள்ளியில்,5ம் வகுப்பு படித்து வந்த,இரண்டு குழந்தைகள் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளனர்.அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் முதியவர்கள் இருவர்,மிட்டாய்,கடலை போன்றவற்றை வாங்கி கொடுத்து,அவர்களிடம் செல்லமாக பேசியுள்ளனர். பின்னர், அருகேயுள்ள புதர் பகுதிக்கு அடிக்கடி அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது’ என, குழந்தைகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் இருவரும், வீட்டில் யாரிடமும் தகவலை தெரிவிக்கவில்லை.இந்நிலையில்,குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்,சோர்வடைந்த நிலையில் இருந்த குழந்தைகளிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து,பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட தாசய்யா,62, கிருஷ்ணன்,73,ஆகியோர் மீது’போக்சோ’சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி