• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா?- ரிலீசுக்கு ரெடியான சிவப்பு மஞ்சள் பச்சை

September 5, 2019 தண்டோரா குழு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது. ஏற்கனவே பல முறை வெளியீட்டு
தேதி அறிவிக்கப்பட்டும்,ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாகவே இப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இதற்கடையில், எனை நோக்கி பாயும் தோட்டா படம் ‘செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு’ என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாவதில் சிக்கல் நீடிப்பதால், சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க