• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வஉசி இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை

September 5, 2019 தண்டோரா குழு

செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனாரின் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள வஉசி இழுத்த செக்கிற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சிறைத் துறையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது முக்கிய பங்காற்றிய செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ உ சிதம்பரனார் 1908 ம் ஆண்டு வெள்ளையரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.சுமார் சுமார் 29 மாதங்கள் அங்கு சிறைவாசம் அனுபவித்த வ உ சி பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டார்.அதன் ஒரு பகுதியாக மாடுகளை கொண்டு இழுக்கப்படும் செக்கினை அவரது தோளில் சுமந்து இழுக்க வைத்து வெள்ளையர்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.பின்னர் கோவையிலிருந்து கேரள மாநிலம் கண்ணனூர் சிறைக்கு வ உ சி மாற்றப்பட்டார்.பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு அவர் இழுத்த செக்கு கோவை மத்திய சிறையில் பாதுகாத்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆண்டுகளாக கோவை மத்திய சிறை வளாகத்தில் மண்டபம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரது 148 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவரது செக்கிற்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்,அகில இந்திய வ உ சி மக்கள் நல இயக்க தலைவர் ஆத்மா சிவகுமார்,சிறைத்துறை முன்னாள் டி ஐ ஜி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் அங்குள்ள வ உ சி திரு உருவ சிலைக்கும் மாலை அணிவித்து வ உ சி புகழ் பாடி முழக்கமிட்டனர்.

மேலும் படிக்க