• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய பெண்ணை கைது செய்யக்கோரி புகார்

August 31, 2019 தண்டோரா குழு

அருந்ததிய மக்களை மிகவும் அபாசமாகவும், வன்முறையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளங்களில் பேசி பதிவிட்ட பெண்ணை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை எடுத்து அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு பரப்பி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டாலும் இது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் பெண் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளில் கொச்சைப்படுத்தி, சாதிக்கலவரத்தை உருவாக்கும் வண்ணம் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது தாழ்த்தப்பட்ட மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி அவதூறாக பேசிய பெண்ணை எஸ் சி எஸ் டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி சமூக ஆர்வலர் பெரியார் மணி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

மேலும் படிக்க