• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆர்.எஸ் புரத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

August 24, 2019 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ் புரத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கோவையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன.

இந்நிலையில், ஆர்.எஸ் புரம் பெரியசாமி சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்கள் இருவரது வீட்டில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியை காவல்துறையினர் துவக்கியுள்ளனர்.

மேலும் படிக்க