• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆர்.எஸ் புரத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தல்

August 24, 2019 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ் புரத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கோவையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன.

இந்நிலையில், ஆர்.எஸ் புரம் பெரியசாமி சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்கள் இருவரது வீட்டில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியை காவல்துறையினர் துவக்கியுள்ளனர்.

மேலும் படிக்க