• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போலீசார் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை – கோவை ஆணையர்

August 23, 2019 தண்டோரா குழு

கோவை போலீசார் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை என கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் கூறியுள்ளார்.

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து,சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், மற்றும் பேருந்து நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

6 பயங்கரவாதிகள் கோவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது; நகரின் முக்கிய இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்.கோவையில் வணிக வளாகங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. கோவை முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என தேடி வருகிறோம்.தீவிரவாதிகள் குறித்த எந்த புகைப்படமும் கிடைக்கவில்லை. கோவை போலீசார் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை. தேவையில்லாத பதற்றம் வேண்டாம், போலீசார் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் எனக் கூறினார்

மேலும் படிக்க