• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனிம வள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் கொலை மிரட்டல் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

August 19, 2019 தண்டோரா குழு

கனிம வள கொள்ளையை தடுக்க மனு அளித்ததால் செங்கல் சூளை அதிபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதாகவும் கனிம வள கொள்ளையால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கபட்டு உள்ளதாக குறிப்பிடபட்டு இருந்தார்.

இது குறித்து ரங்கராஜ் கூறுகையில்,

இந்த பகுதி விவசாய நிலங்கள் எனவும் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வந்ததாக தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு செங்கல் சூளை அமைத்து தினமும் 4000 லோடு செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளவர்கள் 50 முதல் 60 அடி ஆழம் தோண்டி மண் எடுப்பதாக குற்றம் சாட்டினார்.மேலும் மண் அள்ள ரோபோகளை உபயோகிப்பதாக கூறியவர் தற்போது கிராவல் மண் மற்றும் மணல் அள்ள படுவதாக தெரிவித்தார். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் செங்கல் சூளை உரிமையாளர்கள் இயற்கை வளத்தை அழித்து கோடி கணக்கில் சம்பாதித்துள்ளனர் குற்றம் சாட்டினார்.

மேலும் பச்சை செங்கலை வேக வைக்கும் போது வெளிவரும் புகையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்டுவதாக கூறியவர் ஆழ் துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவதாக தெரிவித்தார். கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் இது குறித்து மனு அளித்ததால் செங்கல் சூளை உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும் கணிம வள கொள்ளையில் ஈடுபடுவர்களின் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க