• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் – மாநகராட்சி ஆணையர்

August 14, 2019 தண்டோரா குழு

கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் ஷர்வன் குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சவாலான ஒன்றாக இருக்கிறது. மக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை பிரித்து கொடுக்க வேண்டும்.வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை நடைபெறுவது போல மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுத்திக்குள் கொண்டு வரப்படும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் குப்பை போடும் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி விரைவில் குப்பை வரி வாங்குவோம். மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், நாளைக்குள் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க