• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசித் தாக்குதல்

October 5, 2016 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலம் பீகானிர் பகுதிக்குச் சென்றிருந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிகானீர் சென்றிருந்தார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் வீட்டில் இருந்து வெளியே வரும் போது, அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் கெஜ்ரிவால் மீது மை வீசினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்தனர்.

இது தொடர்பாக இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தன் மீது நடத்தப்பட்ட மை வீச்சு தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், மை வீசியவர்களுக்கு வாழ்த்துகள் என்றும், அவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட கெஜ்ரிவாலுக்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மீது மை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க