• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நுரை பொங்கிய நொய்யல் நதி – பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி

August 7, 2019 தண்டோரா குழு

சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு மற்றும் சாக்கடைக்கழிவு நீரும் நுரையுடன் கலந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஆரம்பித்து ஜீவ நதியாக ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதி தற்பொழுது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் நுரையுடன் கூடி கருமை நிறமாக வருகிறது.
மேலும்,சாலையில் வருபவர்கள் மீது நுரை கலந்த சாக்கடை கழிவுநீர் நுரையாக காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது.இதனால் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க