• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

August 2, 2019 தண்டோரா குழு

ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவை மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட 27 வகையான மூலிகை பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மாதங்களில் சிறந்த மாதம் ஆடி மாதம். பெண்களுக்கு உரிய மாதம் என்பதாலும் ஆடி மாதத்தில் விரதம் இருந்தும், பய பக்தியுடன் கடவுளை வணங்குவர். இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மாகளியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டும் மழை வளம் பெற வேண்டியும் மக்கள் நலம் பெறவும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இப்பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட 27 வகையான மூலிகை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த பழங்கள் அனைத்தும் நாளை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.அம்மனுக்கு நடந்தேறிய அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் மாகாளி அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் இச்சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க