• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை யாரும் கடத்தவில்லை கோவையில் நடிகை சத்யகலா பேட்டி

August 1, 2019 தண்டோரா குழு

தயாரிப்பு தரப்பின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாகவும் தனது பெற்றோர் குறித்தான அவதூறுகளுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தொரட்டி படத்தின் கதாநாயகி சத்தியகலா தெரிவித்துள்ளார்.

கோவை அடுத்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் தொரட்டி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்றுள்ள இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடித்த சத்திய கலா என்பவர் மாயமாகிவிட்டதாகவும் அவரை அவரது பெற்றோரே கடத்தி வைத்திருப்பதாகவும் கூறி அவரை மீட்டுத்தரக்கோரி தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கதாநாயகி சத்திய கலா கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தன்னை யாரும் கடத்தவில்லை எனக்கூறிய அவர் தான் தனது பெற்றோரோடு சொந்த ஊரான பொள்ளாச்சியில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தார். தயாரிப்பு தரப்பினரின் அணுகுமுறையில் உடன்பாடு இல்லாததால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாகவும் ஆனால் தயாரிப்பு தரப்பு தன் மீது அவதூறு பரப்பும் வகையிலும், படத்திற்கு எதிர்மறை விளம்பரம் தேடும் வகையில் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார்.

தனக்கு பேசிய சம்பளமான ஒரு லட்சம் ரூபாயில் 50 ஆயிரம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இருப்பினும் திரைப்படம் நல்ல கதையம்சத்துடன் வெளிவர உள்ளதால் அது குறித்து தனக்கு வருத்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். தயாரிப்பு தரப்பினர் பாலியல் ரீதியாக ஏதேனும் தொந்தரவு அளித்தனரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அது குறித்து தற்போது எதிர்மறையாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். தனது பெற்றோர் குறித்து அவதூறாக பேசியதற்காக தயாரிப்பு தரப்பினர் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்திய அவர், தயாரிப்பு தரப்பினர் தன்னிடம் மூன்றாம் நபர் மூலமாக சமாதானம் பேச முயன்றதால் அதில் தங்களுக்கு உடன்பாடில்லை எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதாகவும் நடிகை சத்திய கலா தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவரது தந்தை ரத்தினம், தாயார் பாரதி, வழக்கறிஞர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க