July 30, 2019
தண்டோரா குழு
நான் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன் என முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,
நான் முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கென்று குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்த வேண்டாம். அதேவேளையில் என்னை தொலைப்பேசியிலும் அழைக்காதீர்கள் எனக் கோரிக்கை வைத்துள்ளார். மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். தீபா பேரவை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜெ.தீபா அந்த பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளார். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.