• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2018 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

July 29, 2019 தண்டோரா குழு

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, தேசிய புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல், ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, 2018ம் ஆண்டுக்கான தேசிய புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,

2018 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 புலிகள் உள்ளன.கடந்த 2014 ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருந்தன. தற்போது புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். 2022ம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்பாக 2018ம் ஆண்டிலேயே இந்தியா நிறைவேற்றியுள்ளது. நாம் அனைவரும் புலிகளை காத்திட கடமை பட்டிருக்கிறோம். புலிகளை காத்திட அரசும் முழு முயற்சியில் இறங்கி உள்ளன. அரசின் நடவடிக்கை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.

மேலும் படிக்க