• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சண்டை

July 27, 2019 தண்டோரா குழு

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் குறித்த நேரத்திற்கு பேருந்தை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பேருந்து ஓட்டுனரும் அரசு பேருந்து ஓட்டுநரும் சண்டையிட்டு கொண்ட காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

உக்கடத்தில் இருந்து எண் மூன்று கொண்ட தனியார் பேருந்து புறப்பட வேண்டிய நேரத்தில் 30 F என்ற அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இதனால் இரு ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏறட்டு பொதுமக்கள் முன்னிலையில் இரு பேருந்து ஓட்டுநர்களும் ஒருவருக்கு ஒருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து இருவரும் நடு பேருந்து நிலையத்தில் பொது மக்கள் முன்னிலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்டனர். இக்காட்சியை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் தனியார்
பேருந்து ஓட்டுனர் தனுஷ் காயமுற்றார்.

இச்சம்பவம் குறித்து உக்கடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஓட்டுநர்களே ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க