• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூரில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் பலி

July 27, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மைத்துனர் பஸ்ஸில் இவர் கட்டிட கண்டிராக்டராக வேலை செய்து வருகிறார் இவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இவர் இவருடன் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேருடன் நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல காரில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பைபாஸ் சாலையில்திருச்சியில் இருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் 5 பேர் இறந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க