• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லூரிக்குள் முதலையை விட்ட மர்ம நபர்ககள்

October 4, 2016 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் ஒரு கல்லூரியின் அலுவகத்திற்குள் முதலைகளை விட்ட நான்கு வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு டார்வின் என்னும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹம்ப்டி டூ நகரில் உள்ளது டாமினிம் கல்லூரி. கடந்த ஞாயிறன்று இக்கல்லூரியின் அலுவகத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் அதற்குள் முதலைகளை விட்டு சென்றுள்ளனர்.

அலுவகத்திற்குள் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதலைகளை அங்கிருந்து மீட்டனர்.

வாயில் துணியால் கட்டப்பட்டும் நீண்ட நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும் மிகவும் பரிதாமாக நிலையில் முதலைகள் இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உப்பு தண்ணீரில் வசிக்கும் இந்த முதலைகள் இங்கு எப்படி வந்தது என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

இதுகுறித்து, விசாரித்த வந்த காவல்துறையினர் அங்கிருந்த கேமராவில் பார்த்தனர். அதில், தங்கள் முகத்தை தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடியிருந்த நான்கு மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடியை உடைந்து முதலைகளை ஒன்றன்பின் ஒன்றாக விட்டது தெரியவந்தது. மேலும்,அவர்கள் அந்த அறையை சூரையாடிவிட்டு, அங்கு இருந்து தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க