• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கல்லூரிக்குள் முதலையை விட்ட மர்ம நபர்ககள்

October 4, 2016 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் ஒரு கல்லூரியின் அலுவகத்திற்குள் முதலைகளை விட்ட நான்கு வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு டார்வின் என்னும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹம்ப்டி டூ நகரில் உள்ளது டாமினிம் கல்லூரி. கடந்த ஞாயிறன்று இக்கல்லூரியின் அலுவகத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் அதற்குள் முதலைகளை விட்டு சென்றுள்ளனர்.

அலுவகத்திற்குள் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதலைகளை அங்கிருந்து மீட்டனர்.

வாயில் துணியால் கட்டப்பட்டும் நீண்ட நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும் மிகவும் பரிதாமாக நிலையில் முதலைகள் இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உப்பு தண்ணீரில் வசிக்கும் இந்த முதலைகள் இங்கு எப்படி வந்தது என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

இதுகுறித்து, விசாரித்த வந்த காவல்துறையினர் அங்கிருந்த கேமராவில் பார்த்தனர். அதில், தங்கள் முகத்தை தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடியிருந்த நான்கு மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடியை உடைந்து முதலைகளை ஒன்றன்பின் ஒன்றாக விட்டது தெரியவந்தது. மேலும்,அவர்கள் அந்த அறையை சூரையாடிவிட்டு, அங்கு இருந்து தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க