ஆஸ்திரேலியாவில் ஒரு கல்லூரியின் அலுவகத்திற்குள் முதலைகளை விட்ட நான்கு வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு டார்வின் என்னும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹம்ப்டி டூ நகரில் உள்ளது டாமினிம் கல்லூரி. கடந்த ஞாயிறன்று இக்கல்லூரியின் அலுவகத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் அதற்குள் முதலைகளை விட்டு சென்றுள்ளனர்.
அலுவகத்திற்குள் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதலைகளை அங்கிருந்து மீட்டனர்.
வாயில் துணியால் கட்டப்பட்டும் நீண்ட நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும் மிகவும் பரிதாமாக நிலையில் முதலைகள் இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உப்பு தண்ணீரில் வசிக்கும் இந்த முதலைகள் இங்கு எப்படி வந்தது என தெரியவில்லை என கூறியுள்ளனர்.
இதுகுறித்து, விசாரித்த வந்த காவல்துறையினர் அங்கிருந்த கேமராவில் பார்த்தனர். அதில், தங்கள் முகத்தை தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடியிருந்த நான்கு மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடியை உடைந்து முதலைகளை ஒன்றன்பின் ஒன்றாக விட்டது தெரியவந்தது. மேலும்,அவர்கள் அந்த அறையை சூரையாடிவிட்டு, அங்கு இருந்து தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் தேடிவருகின்றனர்.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை