• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு

July 26, 2019 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவால் நகர முடியாமல் இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் நின்றுருந்த 12 வயது மதிக்கதக்க பெண் யானை இன்று உயிரிழந்தது.

கோவை துடியலூரை அடுத்த வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்கும் இடங்கள் அமைந்துள்ளன.இந்த இடத்தில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை
இரண்டு நாட்களாக ஓரே இடத்தில் நகராமல் சோர்வுடன் நின்று வந்தது. இதை பார்த்த பொது மக்கள் யானை நிற்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் பெண்யானையை கண்காணித்து வந்தனர். பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இன்று பெண் யானை உயிரிழந்தது. வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க