• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டுப் பன்றிகளால் பொதுமக்கள் அச்சம்

July 26, 2019 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு நேரத்தில் உணவு தேடி வரும் காட்டுப் பன்றிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் உள்ள மாதம்பட்டி தொண்டாமுத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் உணவு தேடி சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை தாக்கிவிடுமோ அல்லது இரவு நேரங்களில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் உள்ளனர்.

மேலும் இதுபோன்று இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் ஊருக்குள் புகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க