• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் 2 மாத பயிற்சியைத் துவங்கினார் தோனி!

July 25, 2019 தண்டோரா குழு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் இணைந்து 2 மாத பயிற்சியை இன்று துவங்கினார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், தோனி கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு எந்த கருத்தும் கூறவில்லை. இதற்கிடையில்,வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது. அப்போது, தோனி தாமாக முன்வந்து தொடரில் இருந்து விலகினார். மேலும் தான் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி லெப்டினென்ட் அந்தஸ்தில் பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து தோனி பயிற்சி பெற்று வருகிறார். இதற்கிடையே ராணுவ பாரசூட் ரெஜிமென்டின் அசைவுக்காக காத்திருந்த தோனிக்கு, கடந்த வாரம் ராணுவத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தோனி 106 பாரா டிஏ பாரசூட் ரெஜிமென்டில் முறைப்படி சேர்ந்துள்ளார். ஜூலை 31 முதல், ஆகஸ்ட் 15-அம் தேதிவரை பயிற்சிக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க