July 25, 2019
தண்டோரா குழு
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு சட்டக்கல்லூரி வாயில் முன்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டதி புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும் , ஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பிய மாணவ மாணவிகள் குலக்கல்வியையும் , சிறிய வகுப்பு முதல் பெரிய வகுப்புகள் வரை தேசிய அளவில் தேர்வுகள் , உயர்கல்வி முடித்த பின் அனைத்துக்கும் நுழைவுத்தேர்வுகள் , எக்சிட் தேர்வுகள் என பல்வேறு தேர்வு முறைகளை கொண்டுள்ளதால் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த கூடாது என்றும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விவசாய நிலங்களை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.