• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 24, 2019 தண்டோரா குழு

ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து, கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா,

இலாபகரமாக இயங்கும் இரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தென்னக ரயில்வேயில் சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை – கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரயில்கள் தனியாருக்கு கொடுத்தால் ரயில் டிக்கெட்களின் விலை உயரும் , 10 ரூபாய் பிளாட்பாரம் டிக்கெட் நூறு ரூபாயாக உயரும் எனவும் கூறிய அவர், இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தென்னக ரயில்வேயில் 30 ரயில் நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு ஒப்படைக்க உள்ளதாகவும், ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க