• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

A1 திரைப்படத்தை தடை செய்யக்கோரி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு

தண்டோரா குழு
July 23, 2019

பிராமண சமுதாய பெண்களை இழிவு படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட A 1 என்ற திரைப்பட காட்சிகளை தடை செய்ய கோரி கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சமீபத்தில் A 1 என்ற திரைப்படம் நடிகர் சந்தானம் மற்றும் ஜான்சன் தயாரிப்பில் ராஜ்நாராயணன் அவர்களின் குழுவினரால் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வரும் 26 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தில் முட்டை சாப்பிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அக்ரகார மாமி,மயங்கி விழுந்த மாமியின் தோப்பானார்என்று இதுபோல் பிராமணர் பெண்களை காதல் என்ற பெயரில் இழிவாகவும்பிராமணர்களை கொச்சைப்படுத்தியும்,ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தடை செய்ய கோரியும்,பட தயாரிப்பு குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யாவிடம் அகில பாரத பிராமணர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி உலக அளவில் மிக பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க