• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் – 5 பேர் கைது

July 20, 2019 தண்டோரா குழு

கோவையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ராமசெட்டிபாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (22) மெக்கானிக் நின்று கொண்டு இருந்தார். அங்கே வந்த ஒருவர் தங்களிடம் அழகான பெண்கள் உள்ளனர். 2000 ஆயிரம் கொடுத்தால் மஜாஜ் செய்து உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி தொண்டாமுத்தூர் ரோடு ஐயாசாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பிராகஷ்ராஜை அழைத்து சென்று உள்ளார். அங்கு அரை குறை ஆடைகளுடன் பெண்கள் நிற்பதை பார்த்து வெளியே ஒடிவந்து விட்டார் . உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் அங்கு சங்கீதா (35) கோலம்பாக்கம் வண்டலூர் சென்னை , ஜெயவேல் (35) வண்டலூர் சென்னை , வினோத் (33) பவளத்தம்பாளையம் ஈரோடு , சித்தார்த் (25) வெங்கடேஷ் நகர் கவுண்டம்பாளையம் , ஹரிகிருஷ்ணன் (25) ராமகிருஷ்ணா நகர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஒரு பெண் உட்பட ஐந்து நபர்களை வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் மடக்கிப்பிடித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க