• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் – 5 பேர் கைது

July 20, 2019 தண்டோரா குழு

கோவையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ராமசெட்டிபாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (22) மெக்கானிக் நின்று கொண்டு இருந்தார். அங்கே வந்த ஒருவர் தங்களிடம் அழகான பெண்கள் உள்ளனர். 2000 ஆயிரம் கொடுத்தால் மஜாஜ் செய்து உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி தொண்டாமுத்தூர் ரோடு ஐயாசாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பிராகஷ்ராஜை அழைத்து சென்று உள்ளார். அங்கு அரை குறை ஆடைகளுடன் பெண்கள் நிற்பதை பார்த்து வெளியே ஒடிவந்து விட்டார் . உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் அங்கு சங்கீதா (35) கோலம்பாக்கம் வண்டலூர் சென்னை , ஜெயவேல் (35) வண்டலூர் சென்னை , வினோத் (33) பவளத்தம்பாளையம் ஈரோடு , சித்தார்த் (25) வெங்கடேஷ் நகர் கவுண்டம்பாளையம் , ஹரிகிருஷ்ணன் (25) ராமகிருஷ்ணா நகர் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஒரு பெண் உட்பட ஐந்து நபர்களை வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் மடக்கிப்பிடித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க