July 17, 2019
தண்டோரா குழு
கோவையில் அழகு நிலையத்தில் பணியாற்றிய இளம் பெண் மர்ம மரணம் அடைந்துள்ளார். அழகு நிலைய உரிமையாளர்கள் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் சோபனா என்ற 25 வயது இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அழகு நிலையத்தில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டதால் பலர் காயம் அடைந்தனர்.