• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அழகு நிலையத்தில் பணியாற்றிய இளம் பெண் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்

July 17, 2019 தண்டோரா குழு

கோவையில் அழகு நிலையத்தில் பணியாற்றிய இளம் பெண் மர்ம மரணம் அடைந்துள்ளார். அழகு நிலைய உரிமையாளர்கள் கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் சோபனா என்ற 25 வயது இளம் பெண் பணியாற்றி வந்துள்ளார். இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அழகு நிலையத்தில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பெண்ணின் உறவினர்கள் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினருடன் கைகலப்பில் ஈடுபட்டதால் பலர் காயம் அடைந்தனர்.

மேலும் படிக்க