• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரி கோவையில் விசிக ஆர்ப்பாட்டம்

July 10, 2019 தண்டோரா குழு

சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும் மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரியும் விடுதலை சிறுத்தையின் கட்சியின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை ஏற்றார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆணவ படுகொலைகளை தடுத்த நிறுத்த தவறியதாக மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்,

மேட்டுப்பாளையம் வர்ஷினிப்ரியா கனகராஜ் படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க