July 6, 2019
தண்டோரா குழு
பொள்ளாச்சியில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி குமரன் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். அமானுல்லா தனது நண்பர்களிடம் காதலிக்கும் விசயத்தை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அமானுல்லா மற்றும் நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தை வெளியில் கூறக் கூடாது என்று மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து சித்ரவதைக்கு ஆளான மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் அமானுல்லா மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரனை நடத்திய போலிசார் 6 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.