• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலூர் மக்களவை தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டி…. திமுக அறிவிப்பு

July 6, 2019 தண்டோரா குழு

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

17 ஆவது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்தது. தமிழகத்தில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வேட்புமனுதாக்கல் வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஆக.9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேலூர் மக்களவையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவி்க்கப்பட்டுள்ளார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க