July 5, 2019
தண்டோரா குழு
கோவையில் பருவ மழை தீவிரமடைய உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ அனைப்பு படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து போலி ஒத்திகையை நிகழ்த்தி காட்டினார்கள்.
கோவை வடக்கு தீ அணைப்பு துறையினர்.மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில்,கோவை வடக்கு கவுண்டம் பாளையம் நிலைய அலுவலர் செல்வமோகன் தலைமையில், கமாண்டோ, மற்றும் நீச்சல்வீரர்கள், கோவை முத்தண்ணன் குளத்தில் பாதுகாப்பு போலி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதில் நீர் நிறைந்த இடங்களில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது , ரப்பர் போட்டில் சென்று காப்பாற்றுவது போன்றும், தண்ணீரில் நீந்தி சென்று காப்பாற்றுவது, முதலுதவி சிகிச்சை மேற்கொள்வது .மேலும் தேங்கிய நீரை வெளியேற்றுவது போன்ற போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தீ அணைப்பு துறையில் நீச்சல் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் செய்து காட்டினார்கள்.