• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

July 5, 2019 தண்டோரா குழு

வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
,பள்ளர் , குடும்பர் , பண்ணாடி , காலாடி , தேவேந்திர குலத்தார் , வாதிரியார் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும்.

சாதிவாரி அடிப்படையில் மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தி தேவேந்திர குல வேளாளர்களுக்கு 20 % தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து விடுவித்து MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க