• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விமானத்தின் பெட்ரோல் டேங் கழண்டு விழுந்து வெடித்ததால் பரபரப்பு

July 2, 2019

விமான படை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது விமானத்தின் பெட்ரோல் டேங் கழண்டு விழுந்து வெடித்தத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை சூலூர் பகுதியில் இந்திய விமான படை பயிற்சி தளமானது அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்று காலை மிக்21 என்ற போர் விமானத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது அதிலிருந்த 1200லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங் கழண்டு கோவை இருகூர் பகுதியில் உள்ள விவசாயி நிலத்தில் விழுந்து வெடித்தது.

விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விவசாயி நிலத்தில் விழுந்ததால் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தேஜஸ் ஏர்கிராப்ட் குட்டி விமானத்தில் 2 வீரர்கள் பயிற்சி பெற்ற போது , ஒரு பெட்ரோல் டேங்கில் தீப்பற்றியதால், பாதுகாப்பு கருதி அதனை கழற்றி கீழே விட்டுள்ளனர் என விமான பயிற்சி துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க