• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீண்டாமை சுவர் கட்டும் பணிகளை தடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சித்தலைவரிடம் மனு

July 1, 2019 தண்டோரா குழு

தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்கும், பொதுவழிக்கும் இடையே கட்டப்படும் தீண்டாமை சுவர் கட்டும் பணிகளை தடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கே வடமதுரையில் 50 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான விருத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலைச்சுற்றி நான்கு திசைகளிலும், மதில் சுவர் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் வருகின்ற 11 ஆம் தேதி கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகேயும்,பொதுவழியை ஒட்டியும் 7 அடி உயரத்தில் 300 அடிக்கு இந்த சுவர் கோவில் நிர்வாகத்தால் கட்டப்படுகிறது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் , இந்து கோவிலுக்கும் இடையில் எழுப்பப்படும் தீண்டாமை சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளித்தனர்.

மேலும் படிக்க