• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக அரசு சார்பில் இனி ஆஜராகப்போவதில்லை – பாலி எஸ். நாரிமன்.

October 1, 2016 தண்டோரா குழு

கர்நாடக அரசு சார்பில் இனி ஆஜராகப்போவதில்லை என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் கார்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வரும் பாலி எஸ். நாரிமன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பாலி எஸ்.நாரிமன் பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ,முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தனது முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கர்நாடக முதலமைசரின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா கூறும் போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க