• Download mobile app
21 Jun 2025, SaturdayEdition - 3419
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக அரசு சார்பில் இனி ஆஜராகப்போவதில்லை – பாலி எஸ். நாரிமன்.

October 1, 2016 தண்டோரா குழு

கர்நாடக அரசு சார்பில் இனி ஆஜராகப்போவதில்லை என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் கார்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி வரும் பாலி எஸ். நாரிமன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பாலி எஸ்.நாரிமன் பணியாற்றி வருகிறார். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இவர் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

காவிரி வழக்கில் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இருந்து கர்நாடகத்துக்கு எதிரான உத்தரவுகள் வெளியானதால் நாரிமனை கண்டித்து அம்மாநிலத்தில் கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். இவரது வாதம் எடுபடவில்லை என்று கர்நாடக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ,முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோரை நேரில் சந்தித்து வழக்கில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தனது முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்துள்ளார். இது கர்நாடக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கர்நாடக முதலமைசரின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா கூறும் போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காதது அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க