• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

July 1, 2019 தண்டோரா குழு

திமுக மாநிலங்களவை வேட்பாளா்களாக தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞா் வில்சன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டி.ரத்னவேல், மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. இதையடுத்து, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தமுள்ள 6 சீட்களில் அதிமுக மற்றும் திமுக வசம் தலா 3 சீட்கள் இருக்கின்றன.

இந்நிலையில், திமுக மாநிலங்களவை வேட்பாளா்களாக தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞா் வில்சன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள ஒரு எம்.பி. சீட் தேர்தல் கூட்டணி உடன்படிக்கையின் படி, மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க