• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

June 27, 2019 தண்டோரா குழு

கோவையில் காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரியவர் மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு, நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

கோவை பேரூர் , சொர்க்கவாசல் வீதியில் உள்ள சாமவேத பாராயண மடத்தில், காஞ்சி மகா பெரியவர் விக்ரஹம் பிர திஷ்டை மற்றும் கும்பா பிஷேக விழா கடந்த 23 ந்தேதி துவங்கியது. சாமவேத பாராயணம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ராம் மற்றும் லட்சுமணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் முன்னதாக சாம வேத பாராயண மடத்தில் , காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரி யவர்மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு,மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹம்,ஆதிசங்கரர், வேத வியாசர், மற்றும் ஜெயேந்திரர் விக்ரஹங்கள் நிறுவப்பட்டது.

பின்னர் மகா பெரியவரின் விக்ரஹம் சென்னை , மதுரை , திருச்சி , திரு வண்ணாமலை , ஆத் துார் , சேலம் , ஈரோடு , பாலக்காடு , பெங்களூரு மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு , பூஜை , ஆராதனை முடிந்து ,கோவைக்கு கொண்டு வரப்பட்டு,கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்றது. மேலும், மகா சங்கல்பமும், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்று, மேள தாளம் முழங்க புனிதநீர் கலசங்கள் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு,மகா பெரியவாவின் விக்ரகத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க