• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் ஆணையம்

June 25, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டி.ரத்னவேல், மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் திமுக 3 எம்.பி.க்களையும், அதிமுக 3 எம்.பி.க்களையும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும்.

இதற்கான தேர்தல் ஜூலை 18-ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி மற்றும் நடைமுறைகள் குறித்த அறிவிக்கை ஜூலை 1-ம்தேதி வெளியிடப்படும். ஜூலை 8-ம்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்து கொள்ளலாம். 9-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 11-ம்தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூலை 22-ம்தேதியுடன் முடிகிறது.

மேலும் படிக்க