• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி தாய் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

June 25, 2019 தண்டோரா குழு

மதம் மாறிய தன் மகளை மீட்டு தரும்படி தாய் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் அரசூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். கணவரை பிரிந்து தனது தம்பி வீட்டில் வசிக்கும் முனிரத்தினத்திற்கு பூங்கோதை என்ற 22 வயது மகள் இருக்கிறார். கோவை கற்பகம் கல்லூரியில் படிப்பை முடித்து திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்திருப்பதாக கூறி தனது நண்பர்கள் பாரதி மற்றும் சாராவுடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த பூங்கோதை கழுத்தில் சிலுவை அனிந்துள்ளார். முனிரத்தினம் விசாரித்த போது, தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி மீண்டும் யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இது குறித்து முனிரத்தினம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பூங்கோதையை போலீசார் அழைத்து விசாரித்த போது சுய விருப்பத்தின் படியே மதம் மாறியதாக கூறி இருக்கிறார்.

மேஜர் பெண் என்பதால் போலீசாரும் பூங்கோதை விருப்பப்படியே மீண்டும் திருச்சிக்கே அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மதம் மாறிய தனது மகள் பூங்கோதையை மீட்டு தரும்படி முனிரத்தினம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க