• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவலர்களுக்கான ரத்ததான முகாமை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் தொடங்கிவைத்தார்

June 21, 2019 தண்டோரா குழு

கோவைப்புதூர் பட்டாலியன் வளாகத்தில் காவலர்களுக்கான ரத்ததான முகாமை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 81 இடங்களில் நடைபெறும் முகாம்களில் 13,868 காவலர்கள் ரத்த தானம் வழங்குகின்றனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கோவைபுதூரிலுள்ள 4 பட்டாலியன் முகாமில் ரத்த தான நிகழ்வை கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் சுமித் சரண் ரத்த தானம் கொடுத்து துவங்கி வைத்தார்.

இதனையடுத்து 8 பெண்கள் உட்பட 566 பேர் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். இதில் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் ரத்த தானம் வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஏப்ரல், மே மாதங்களில் கல்லூரி விடுமுறை என்பதால் ரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ரத்த பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் காவலர்களிடமிருந்து எடுக்கப்படும் ரத்தம் உடனடியாக நோயாளிக்கு பயன்படும் வகையில் இந்த முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த ரத்த தான முகாமை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் அசோகன் தலைமையில் ரத்த வங்கியின் மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் படிக்க