• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம்பெண் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு

June 19, 2019 தண்டோரா குழு

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர் நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்த நோய், கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அதேபோல, நாடு முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மூளை காய்ச்சலினால் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலினால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா (21). இவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக கடந்த 15-ம் தேதி ரம்யாவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு பரிசோதனை செய்ததில், மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இளம் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க