• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த உத்தரவு

June 19, 2019 தண்டோரா குழு

நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23.06.2019 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பாண்டவர் அணியின் மீதுள்ள அதிருப்தியால் அவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இரு அணிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடிவடிக்கைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க