• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி உள்ளது – அமித் ஷா

June 17, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இந்திய அணியுடன் 7 முறையாக தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி வீழ்த்தி இருப்பதை சர்ஜிகல் தாக்குதலோடு ஒப்பிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி உள்ளது.அற்புதமாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும், கொண்டாடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க