• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

June 17, 2019 தண்டோரா குழு

மேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி மேற்குவங்கத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் அவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் அரசு மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து, அரை மணிநேரம் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நோயாளிகளின் உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மீது அவ்வப்போது தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மருத்துவர்கள் அதிக அளவில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இருப்பது போன்று தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனைகளையும் , மருத்துவர்களையும் தாக்கினால் ஜாமீனில் எளிதில் வெளியே வரமுடியாதபடி கடுமையான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க